|
|
நீங்கள் வெளியே செல்லும் முன் கதவைத் திறந்து வைத்துவிட்டுச் செல்ல மாட்டீர்கள் அல்லவா? இதே கோட்பாடுதான் நீங்கள் பயன்படுத்தும் சாதனங்களுக்கும் பொருந்துகிறது. உங்கள் கணினி, லேப்டாப் அல்லது தொலைபேசியைப் பயன்படுத்தி முடித்தவுடன் திரையை எப்போதும் பூட்ட வேண்டும். கூடுதல் பாதுகாப்பிற்காக, உங்கள் சாதனம் உறக்க நிலைக்குச் செல்லும்போது தானாகவே பூட்டிக்கொள்ளும்படி அமைக்க வேண்டும். இது குறிப்பாக தொலைபேசிகள் அல்லது டேப்லெட்களுக்குப் பொருந்தும். காரணம் ஒருவேளை நீங்கள் இவற்றைக் கவனக் குறைவாக மறந்து வேறு இடத்தில் வைக்கும் சூழலில், மற்றொருவர் கையில் கிடைக்கும்போது உங்கள் தகவலை அவர்கள் அணுக விடாமல் தடுக்கும் மேலும் பகிர்ந்த நிலையில் உள்ள வீட்டுக் கணினிகளுக்கும் இது பொருந்தும்.
|